ஞாயிறு, 10 மார்ச், 2013

ஒன்றே செய் நன்றே செய்

1.ஒன்றே செய் நன்றே செய்
ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லித் தந்த குருநாதர்மேல் சீடனுக்குக் கோபம்.

தன் நேரம் விரைவதாய் வருந்தினான். கூண்டில் அடைக்கப்பட்ட பத்து கோழிகளைத் திறந்து விட்ட குருநாதர் பத்தையும் பிடிக்கச் சொன்னார்.

பத்தும் பத்துத் திசைகளில் ஓடின. துரத்தித் துரத்திக் களைத்தான். 

கழுத்தில் சிகப்பு நாடா கட்டப்பட்ட கோழியை மட்டும் பிடிக்கச் சொன்னார் குருநாதர்.

சில நிமிடங்களிலேயே பிடித்தான். குருநாதர் சொன்னார்

“ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்று.

பலவற்றையும் பிடிக்க நினைத்தால் எல்லாவற்றையும் இழந்து நிற்பாய்!!